வளைந்தும் நெளிந்தும்
வண்ணங்கள் குடித்து,
துளிர் விட்டு, சிறு மலர்கள் பூத்து,
ஆங்காங்கே சுடர் ஏற்றப்பட்டு அழகாய்
படர்ந்திருந்தது அதிகாலைக் கோலம்.
அதை மிதித்து கலைத்த
குழந்தையின் சிரிப்பு
அதனினும் அழகாய்.
Labels: எழுத்து, கவிதை, கிறுக்கல்கள், தமிழ், முயற்சி