புதுசு கண்ணா புதுசு
வெட்டியாத்தான இருக்கோம் ஏதாது எழுதலாமேன்னு தோணுச்சு. சரி நாமளும் ஒரு புது ஆத்திச்சூடிய எழுதுவோம்னு நெனச்சேன். அர்த்தம் புரியாதவங்க, என் கிட்ட தனிப்பட்ட முறைல எழுதி கேட்டுக்கோங்க. ஆனா ஒரு கண்டிஷன். நாளைக்கு தஞ்சாவூர் கல்வெட்டுல இல்லைனாலும் எங்கயாது ஒரு நல்ல எடமா இத செதுக்கி வச்சா பின்னாடி வர்ற சந்ததிகள் படிச்சு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும். (ஆள் இல்லைனாலும் டீ கடைன்னு வந்திட்டா ஆத்தி தான ஆகணும்?)
ஆண்பெண் சமம்
இயற்கை போற்று
ஈரம் வளர்த்திடு
உலகம் சுற்று
ஊர்பணி ஆற்று
எடுத்ததை முடி
எத்தரை விலக்கு
ஏற்றம் நாடு
ஐயம் தீரு
ஒழுக்கம் உயர்வு
ஓட்டம் நிறுத்தேல்
ஔக்கு மட்டும் ஏதும் சிக்கலை
பி.கு.: அப்பறோம் என்னடா ஆத்திச்சூடிக்கு இப்படி ஒரு கவிரிசி படமானு பாக்குறீங்களா? நான் "புதுசு கண்ணா புதுசு"ன்னு கூகுள்ல தேடுனப்போ இது தான் பளிச்சின்னு இருந்துச்சு. சரி இப்படி கூட ஒரு படம் வந்திருக்குன்னு ஒரு நாலு பேருக்கு தெரியட்டுமேன்னு ஒரு நல்லெண்ணத்துல தான் இந்தப் படத்த ஒட்டிருக்கது. மத்தபடி நான் அந்த மாதிரி படம்லாம் பாக்குறதே இல்ல.
Labels: எழுத்து, கிறுக்கல், கிறுக்கல்கள், முயற்சி, மொக்கை
1 Comments:
OV vuku - Ovvaiyar aathichudiku idhu pottiyillai, oru thanipatta muyarchi mattume.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home