Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Tuesday, December 15, 2009

உஷாரய்யா..உஷாரு..........(பகுதி - 1)




"மைக்ரோசாப்ட் எல்லாருக்கும் பணம் குடுக்குது. அங்காளி பங்காளிக்கெல்லாம் இந்த இ-மெயிலுக்கு எழுத சொல்லு", "மாப்பு தாஜ் மகாலுக்கு வச்சுட்டானுங்கடா ஆப்பு. உலக அதிசயத்துல இருந்து தூக்கப் போறாங்களாம். தட்டுறா இ- மெய்லு." "இந்த முருகன் படம் இருக்குற இ- மெய்ல பாத்த ரெண்டு நிமிஷத்துல காண்டேக்ட்ல இருக்குற எல்லா ஆளுக்கும் அனுப்புனா உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டியோட நல்ல வாழ்க்கை கெடைக்கும். இல்லைனா அட்டு பீசும் திரும்பி பாக்காது. கடலை போட ஆளில்லாம கடப்பாறைய முழுங்குன மாதிரியே திரிவீங்க." இப்படி வர்ற இ-மெயிலுக்கெல்லாம் எள்ளுனா எண்ணையா நின்னு, keyboarda காட்டுத்தனமா தட்டுரவங்களா நீங்க? அப்போ இத படிங்க.

சத்தியமா பில் கேட்ஸ் தாமரைகுளம் தாலுகா, சிலுக்குவார்பட்டி ரமேஷுக்கு சேர வேண்டிய பணம் 583.95 போச்சான்னுலாம் உக்காந்து பாக்க மாட்டாரு. அவருக்கு எக்கச்சக்க வேலை இருக்கு. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலையோ, இல்ல தாஜ் மகாலயோ உலக அதிசயமாக்க ஆர்வக் கோளாறுல எச்சா ஒரு 4 இ- மெய்லு தொடங்கி பிரசாரப் பீறங்கிய வெடிக்க விட்டிருந்தா நீங்க ரெம்ப.........நல்ல..........ஏமாளி. இ-மெயில் ஸ்பாம், ஸ்கேம் பத்தியெல்லாம் வெளக்குறது கொஞ்சம் பெரிய வேலை. (உங்களுக்கு புரியாதுன்னு சொல்லலங்க. எனக்கு டைப் பண்ணி வெரல் வலிக்கும்.) அதுனால சிம்ப்ளா எப்பிடி உஷாரா இருக்குறதுன்னு சொல்றேன்.

1. இமெயில் பாதுகாப்பு

உங்கள் இமெயில் பாஸ்ஸ்வேர்ட் மாத்திரம் இல்ல ஐ. டி. (யூசர்நேம்) கூட ரொம்ப முக்கியம். இது எப்படின்னா உங்க செல் நம்பர் தெரியாதவரிடம் இருக்கலாம், ஆனால் உங்கள் பெயர் அவருக்கு தெரியாது. இருந்தாலும் அவரால் உங்களுக்கு இடைஞ்சல் வர வாய்ப்புள்ளது. தேவையில்லாம மெஸ்ஸேஜ், கால் வர்றது மாதிரி, ஈமெயில்லயும் பல பல இடைஞ்சல் இருக்கு. சீர்காழி 'சின்னக் குரங்கு' சித்தரோட ஒரிஜினல் சிட்டுக் குருவி லேகியம். இத சாப்டா எந்திரிக்க முடியாதவனும் எட்டுப் பிள்ளை பெத்துக்கலாம். இந்த மாதிரி ரோட்டோரமா நின்னு வித்தா நாம கண்டும் காணாம போகலாம். ஆனா வீட்டுக்குள்ளையே வந்துட்டா? உங்க இமெயில்ல அப்படி வந்து தான் வயாகரா வாங்கலையோ வயாகரா, பொங்கி வழியும் ஆண்மைக்கு சிங்கி அடிப்பவரா நீங்கள்? இப்படி நாராசமா நாசமா போனவனுங்க பல ஈமெயில் அனுப்புவானுங்க.

இப்படி பலான வெளம்பரத்துல இருந்து, தப்பிக்கணும்னா கண்ட தப்பிலி பயல்கள்டையும் உங்க இ-மெயில் ஐ.டி.யக் குடுக்காதீங்க. நான் சொல்றது அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களுக்கு இல்ல. நம்ம இ-மெயில் ஐ.டி.யக் குறி வச்சே பல பேரு ஊருக்குள்ள அலையிறாங்க. ஊருனா மொத்த இணையமும் ஒரு ஊரு மாதிரி தான். போகக் கூடாத எடம்னு ஊருக்குள்ள இருக்குற மாதிரி இணையத்திலும் சில இடம் இருக்கு. உதாரணத்துக்கு, சில பல பலான சைடுங்க. உங்க ஈமெயில் மட்டும் போதும், சொர்க்கத்தையே உங்களுக்கு காட்டுரோம்னு உள்ள கூப்டு போய் போஸ்டர மட்டும் காட்டிட்டு முழு படம் பாக்கனும்னா துட்ட வெட்டுன்னு கேப்பானுங்க. நீங்க, "நாங்கல்லாம் போஸ்டர் பாத்தே கதைய சொல்லுவோம்டா." அப்படின்னு காலர தூக்கி விட்டுட்டு வெளிய வந்துருவீங்க. ஆனா உங்க குடுமி அதான் ஈமெயில் ஐ.டி. அங்க சிக்கிருச்சு. கெரகம் தலைல ஏறி உக்காந்த மாதிரி தெனமும் நேத்து ராத்திரி................. "எம்மா"னு கத்துநீல? எங்கிட்ட ஒரு மருந்து இருக்கு. சாப்டா சும்மா குதுரயா ஆடலாம்னு ஆரம்பிச்சு, உனக்கு மட்டும் தான் தர்றேன். ஒண்ணு வாங்குனா மூணு இலவசம் எடுத்துட்டு ஓடி போயிரு அப்படின்னு உங்க மானத்த கூவி கூறு போட்டு கதற விட்டுருவாய்ங்க. நீங்களும் எவ்ளோ நேரம் தான் அழுகாத மாதிரியே நடிப்பீங்க?

ஆனா இவங்க யாரு எங்கருந்து தான் வர்றாங்கன்னு தெரியாம திக்கு முக்காடி ஸ்பேம் அப்படின்னு எத்தனை தடவ இன்பாக்ஸ விட்டு அனுப்புனாலும் சனியன் வேற வேற பேர்ல வந்துட்டே தான் இருக்கும். எனக்கு தெரிஞ்சு இந்த ஈமெயில் ஐ.டி. எ வேண்டாம்டா எனக்கு. அப்படின்னு இந்த மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை பூட்டுனவன் பல பேரு. இப்படி பலான சைட்டு தான்னு இல்ல. வட்டி இல்லாம கடன் தர்றோம், இலவசமா டி.வி. என்ன ஹோம் தியேட்டரே தர்ரோம்நேல்லாம் ஆசை காட்டி மோசம் பண்றதுக்குன்னே பல பேர்வழிங்க அலையிறாங்க. ஜாக்கிரதை. சொல்லி போட்டேன் ஆமா.
இது சும்மா தான். ஆரம்பத்துல சொன்னனே பில் கேட்ஸ், முருகன் படம், இதெல்லாம் இன்னும் பெரிய பிளாங்கி வேலை. அதை...............

அடுத்த இன்ஸ்டால்மென்ட்ல, சொல்றேன்.

Labels: , , ,

Wednesday, December 9, 2009

முடியல

என்ன எப்படி வேணாலும் திட்டுங்க. ஆனா இந்த விடியோல உள்ளவங்க மாதிரி இருக்கேன்னு சொல்லி மட்டும் கேவலப்படுத்தாதீங்க. நான் கொலை கேசுல உள்ள போயிருவேன். மனசாட்சியே கெடயாது இவனுங்களுக்கெல்லாம். இவனுங்கள சொல்லி என்ன பண்ண, இவனுங்கள டைரக்ட் பண்ணவங்க, இன்னும் காசு போட்டு படம் எடுக்குரவனுங்க, வெக்கமே இல்லாம இவனுங்களோட அடுத்த படத்தையும் பாககுறவனுங்க எல்லாரையும் தான் தப்பு சொல்லணும்.

Labels: , , , ,