Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Tuesday, August 11, 2009

I am Back

வணக்கம். இப்போ நீங்க இத படிச்சிகிட்டிருந்தா....ஒண்ணு.... நீங்க என்னோட இந்த பதிவுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணி இருக்கணும், இல்ல வழி தவறி வந்திருக்கணும். ஏதோ எழுதனும்னு தோணுச்சு திருப்பி எழுதுறேன். இப்போ உங்க மனசுல உங்களுக்கு இந்த கேள்விலாம் மனசுல இருக்கலாம்.

1. ஏன் இத்தனை நாள் எழுதல?
பகடை கதைய எழுதணும்னு தோனுச்சு. இப்போவும் என் தலைக்குள்ள அந்த கதை இருக்கு. ஆனா அத நான் எப்படி ப்ரெசண்ட் பண்ணனும்னு நினைக்கிறேனோ அப்படி ப்ரெசண்ட் பண்றதுல தான் சிக்கல். அதை அப்படி பண்ண முடிலைனாலும் சிக்கல் தான். விக்கல்னா தண்ணி குடிச்சா சரி ஆயிரும். சிக்கல்னா அப்படியா? ஹி....ஹிஹிஹி...ஹிஹிஹி

2. தொடர்ந்து எழுதுவேனா?
எனக்கு ஜாதகம், ஜோசியம்லாம் பாத்து சொல்லத் தெரியாது. முக்காலமும் உணர்ந்த ஞானியும் கிடையாது நான்.

3. இப்படி பொறுப்பில்லாம பேசுனா எப்பிடி?
என் அப்பா அம்மா சொல்லியே நான் பொறுப்பா இல்ல. நீங்க சொல்லி என்ன ஆக போகுது?

4. அப்போ நாங்க இனிமே இங்க வர வேண்டாமா?
என் இனிய தமிழ் மக்களே......ஏன் இப்படி? நீங்க 2 இல்ல 3 பேரு தான் மொத்தமா வர்றதே. நீங்களும் போயிட்டா ஆளில்லாத கடைல எத்தனை நாளு டீ ஆத்துறது? தயவு செய்து தொடர்ந்து ஆதரவு தாங்க. பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் கூறவும். குறை இருந்தால் என்னிடம் சொல்லவும்.
--
Love and Regards,
Prasad.
http://www.kazhudhai.blogspot.com

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home