சும்மா திரைப்பாடல் போல் கிராமிய மணத்தோடு ஒரு பரிசோதனை முயற்சி.
சிவகாசிப் பட்டாசுடி நான்
சின்னப் புள்ள உன் மல்லிகைப்பூ
சிரிப்புல தான் நான் சிதறிப்போனேன்.
சண்டியரா சுத்துன நான்
சமஞ்ச புள்ள உன்னப் பாத்து
மயிலப் பாத்த சப்பாணியா
சுத்தி சுத்தி வாறேன்.
உன் ஒத்தை சடை குஞ்சம்
அதா நான் மாறட்டுமா கொஞ்சம்.
உன் வீட்டு ஆட்டுக்குட்டி போல
மடியில தான் நான் வரவா புள்ள?
ஆத்தோரமா நான் குளிக்க
மறுபக்கம் நீ கால் நனைக்க
ஆத்துக்குள்ள வேக்குதடி எனக்கு.
ஓரக்கண்ணில் பாக்குற
ஒதுங்கி தான் நடக்குற
முன்னாடி போக விட்டு
பின்னாடி சிரிக்கிற
ஒரு முடிவ சொல்லிரு
என் உயிரையும் தான்
திருப்பி தந்திரு
Labels: கவிதை, காதல், கிராமம், கிறுக்கல்கள், சினிமா, தமிழ்
1 Comments:
நல்ல முயற்சி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home