Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Sunday, November 23, 2008

அவள்


அவள் என் பெயரை
உச்சரித்ததும்
என் பெயர்
பிடித்துப் போனது.
ஒரு குடையின் கீழ்
என்னையும் அவளையும்
இணைத்ததில் தொடங்கியது
மழை மீதான எனது பாசம்.
ஒரு நாள்
அவள் எடுத்து நீட்டியதில்
இருந்து தினமும்
விரிகிறது என் நாளிதழ்
எந்தன் தோளோடு அவள்
உரசுவதாலேயே பிடிக்கிறது
பேருந்து நெருக்கடி
என் தாயோடு பேசுகையில்
அளைந்து விட்டுப் போனதாலே
இனித்தது என வீட்டு
உப்பு மொத்தமும்.
ஒவ்வொரு நாளும்
சிரித்து கடந்து
செல்வதாலேயே
விருப்பமானது வாழ்க்கை.

Labels: , , , ,

1 Comments:

Blogger Rohini Muthuram said...

who is this real "aval"? ;-)

November 30, 2008 at 9:52 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home