Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Wednesday, November 5, 2008

பூ இசை


பூ படத்துல மொத்தம் ஆறு பாட்டுங்க. எனக்கு கேட்டோன பிடிச்சதுனா அது சூ சூ மாரி பாட்டு . அந்த பாட்ட எப்போ கேட்டாலும் 'ஒன்ஸ் மோர்' கேக்காம இருக்கவே முடில. அந்த குழந்தைங்க (இல்ல அப்படி பாடுனவங்க) அவ்வளவு அருமையா பாடிருக்காங்க. அந்த பாட்டு வரியும் கொழந்தை தனத்துல அர்த்தம் இல்லாம பாடிட்டு போன சின்ன வயசு ஞாபகம் வருது. அப்பறோம் 'சிவகாசி ரதியே' பாடுனது நம்ம பெரிய கருப்பு தேவராம். (விருமாண்டி கோவில் பூசாரி) எனக்கு தெரிஞ்சு சின்ன வயசுல விரும்புன ஆள நரைச்சு கெழண்டதுக்கு அப்பறோம் திருப்பி கல்யாணம் பண்ற மாதிரி பாட்டு இது வரை கேட்டதில்ல. அந்த வகைல இத ஒரு வித்தியாசமான பாட்டுன்னே சொல்லலாம். "ஆவரம் பூ" பாட்டு ஒரு பொண்ணு அவ முறைப் பய்யனுக்கு காதிருக்குரத அவன் மேல வச்சிருக்குற காதல சொல்ற பாட்டு. சின்மயி கொரல்ல ஒரு ஏக்கம் ப்ளஸ் பாசம் நல்லாவே தெரியுது. "தீனா" பாட்டு வேகமா ஆரம்பிச்சு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மெதுவா மாறுறது ரசிக்க முடியுது. "பாச மொழி" பாட்டு சின்னதா இருந்தாலும் ரசிக்க முடியுது. ஹரிணி, திப்பு, கார்த்திக் சேர்ந்து பாடுன "மாமன் எங்கிருக்கான்" பாட்டு கிராமிய இசை மாதிரி தெரிஞ்சாலும் அதுல ஒரு நேட்டிவிட்டி இல்லை. இருந்தாலும் கேக்குறதுக்கு நல்லா இருக்குது. மொத்தத்துல புது ஆளு எஸ்.எஸ்.குமரன் நல்லாவே மியூசிக் போட்டிருக்காரு.

Labels: , , , ,

1 Comments:

Blogger bala said...

Hi Ravi,

I read 2 articles. both are interesting though i read in a busy schedule.
Try for some intellectula tamil magazine like 'Kalachuvadu / Vuyirmey'.

Bala.

December 2, 2008 at 11:22 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home