தொடரட்டும்
மின்னல்கள் தாக்கியும்
வெட்டுப்படாதது என் நெஞ்சம்
துப்பட்டாவில் தூக்கிச்
சென்றாய் நீ.
புயல்களை புறம்
தள்ளி வந்தேன்
உன் பூவிழி பார்வை
பட்டே வீழ்ந்தேன்.
ஆயிரம் கேள்விகள்
மனதில் .
விடை சொல்லாமல் நீ
செல்கின்றாய்.
சொல்லாமலே விட்டு
விடு.
பதில் தெரிந்தால்
முற்றுப் பெற்று
விடலாம் நமது
உறவு.Labels: கவிதை, காதல், கிறுக்கல்கள், தமிழ்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home