கவிதை
கவிதை எழுத
அமர்ந்தேன் ஓர் நாள்.
காதல் பற்றி எழுத
நினைத்ததும் தான்
நினைவு வந்தது
இது வரை
காதல் புரிந்ததில்லை என.
சமூக அவலம் பற்றி
எழுத நினைக்கையில்
"அம்மா தாயே....."
என்று கேட்ட குரல்
"எச்சி கையில காகா
ஓட்டாதவன்டா நீ."
ஓலமிட்டது மன சாட்சி.
நட்பென்று நினைத்ததுமே
சிரித்து பேசிய படி
முதுகில் குத்திய நினைவுகள்
வந்து முற்றுப்புள்ளி வைத்தது.
எங்கெங்கோ முட்டி திரிந்த
பின் தெளிவு பெற்றது
என் மனம்.
கவிதை என்பது முத்து
குளிப்பது போல் உணர்ச்சிக்
கடலில் முங்கி
எடுக்க வேண்டும்
குட்டை முன் அமர்ந்து
தூண்டில் வீசி
மீன் பிடிப்பதல்ல என்று.
இப்போது வெள்ளை
காகிதம் என் மனதை
பிரதிபலிப்பதாய்
எனக்கு தோன்றியது.
Labels: எழுத்து, கவிதை, கிறுக்கல்கள், தமிழ்
1 Comments:
paaaruda.....kavidhai ellaaam thaaru maaru......kalakureenga......!!!carry on.....!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home