எரியும் நினைவுகள்
புற்று நோயில்
இறந்த நண்பனை
எரித்து விட்டு
திரும்புகையில்
அவனுக்கு கொடுத்த கடன்,
சிறுவயதில் போட்ட சண்டை,
சொல்லாமல் மறைத்த
அவன் தங்கை மீதான ஒருதலைக் காதல்,
என்று எதற்காகவும் வருந்தவில்லை.
அவன் வாழ்க்கையின்
முதல் சிகரெட் வாங்கி தந்தது
மட்டும் ஒரு ஓரத்தில்
கனன்று கொண்டே
இருக்கிறது.
Labels: கவிதை, கிறுக்கல்கள், தமிழ், நட்பு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home