பெற்றதும் விற்றதும்
படிப்புக்காக பத்து பவுனும்,
பதவிக்காக ரொக்கம் அம்பதாயிரமும்,
தாலி கட்டும் முன் முரண்டு
பிடித்து வாங்கிய கழுத்து சங்கிலியும்,
தலை தீபாவளியன்று ஸ்கூட்டர் இல்லையேல்
தலையில் வைத்த எண்ணையோடு
கெளம்பி விடுவேன் என்று மிரட்டி
மாமனாரிடம் வாங்கியது,
என சாதனைகளை
அடுக்கும் ஆம்பிளைக்கு
பொண்டாட்டி மனதில்
குன்டூசியளவு ஒரு இடம்
கூட கிடைக்காதது
தெரியவே இல்லை.
Labels: கவிதை, கிறுக்கல், கிறுக்கல்கள், சமூகம், தமிழ்
2 Comments:
super.
Itha neengalum ninaivil vachikanga. :)
haha nice thought Ravi
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home