Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Sunday, November 30, 2008

பகடை

முன்னுரை

மனிதனுக்கும் மிருகத்துக்கும் சில வித்யாசங்கள் என்று கூறுவதில் இன்னொரு உயிரை இம்சிக்காததை சொல்வார்கள். அதாவது மிருகங்கள் இன்னோர் உயிரை தன் இரைக்காக அன்றி வேறு காரணங்களுக்காக துன்புறுத்துவதில்லை. மனிதன் மட்டுமே அவ்வாறு செய்கிறான். தன்னால் துன்புறுத்த முடியாத போது தனக்காக ஒரு படையை உருவாக்கி அவர்களுக்கு கூலி கொடுத்து தன்னை எதிர்ப்பவர்கள் மேல் ஏவி விடுகிறான். அப்படி ஏவப்படும் கூலிப் படை சில சமயங்களில் இராணுவம் மற்றும் போலிஸ் போன்ற சீருடைகளும் அணிந்திருப்பது துரதிர்ஷ்டமே. ஏவி விடுபவன் ஒய்யாரமாய் விசை கொடுக்க, இங்கே பொம்மைகள் போல் இரு அணியினரும் ஆடு கின்றனர். வேட்டை ஆடுகின்றனர். இங்கே நடக்கும் வேட்டை இரைக்காக அல்ல. அன்றாட செலவுகளுக்காக, அவர்களின் ஜீவனத் தேவைகளுக்காக, மற்றும் சில சமயங்களில் நிச்சயமில்லாத இந்த வாழ்கையில் சில நாட்களை நிச்சயமாக வாழ்வதற்காக.

இரு பக்கமும் உண்டு நல்லவர், தீயவர், வீரர்கள், கோழைகள், மூடன், அறிவாளி. வேட்டைக்களத்தில் இறங்கிய இரு அணிகளுக்கும் இன்பமும் துன்பமும் பொதுவானதே. இருப்பினும் வேட்டையை நிறுத்தும் அதிகாரம் மட்டும் இல்லை. இதை நான் போர் என்று கூறாததன் காரணம் பண்டைய இலக்கியங்கள் போரில் மாண்டவர்களை வீரர்கள் என்று போற்றுவதால் தான். இங்கே ஈடுபடுபவர்கள் பகடைக் காய்கள். சகுனிகள் மாறினாலும் பகடைக்காய்களுக்கு ஓய்வென்பதில்லை. அவை இரண்டும் இணைந்தே முட்டி மோதும். வீழ்கையில் மட்டும் தனித்து வீழும். உருட்டும் சகுனிகளின் உள்ளம் மட்டுமே அறியும் என்ன எண்ணிக்கை வீழ வேண்டுமென்று.

இங்கே நான் கூறப் போகும் ஒரு கதையும் இரண்டு பகடைக்காய்களை பற்றியே. அவற்றின் பரிமாணங்களை நோக்கின் அவை ஒன்று போல் இருக்கும். இருப்பினும் ஒவ்வொன்றுக்கும் தனிக்கதை உண்டு. ஆனால் சூதாட்ட மேடைக்கு வந்ததும் அவை இரண்டின் கதைகளும் ஒரே மேடையில் தொடர்ந்து செல்லும். இந்தக் கதை என்னுள் தோன்றிய சிறு பொறி. அதை நான் ஊதிப் பெரிது படுத்துவது உங்கள் பின்னூட்டங்களிலும், எனது சோம்பேறித்தனத்தையும் பொறுத்தது. இதை நான் சிறுகதை இல்லை நாவல், குறுநாவல், பெருநாவல் என்று எந்த வரையறைக்குள்ளும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. திரைக்கதை பாணியில் எழுதவே எண்ணினேன் முதலில். இருப்பினும் அதன் உட்பொருள் சிலருக்கு எட்டாது என்ற காரணத்தால் கதை வடிவில் சொல்ல எத்தனிக்கிறேன். 

இந்த படைப்பில் எங்கேயாவது பிழையோ இல்லை வரம்பு மீருதலோ இருப்பின் அவற்றை மன்னித்தாலும், சுட்டிக் காட்ட மறக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: , , , , , ,

1 Comments:

Blogger Unknown said...

wen r u gonna continue this story?
Eagerly waiting...
Getting disappointed daily...

December 3, 2008 at 7:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home