பேனா சிரிக்குமோ?
மூன்றாம் வகுப்பில்
முதன் முதலாக
பேனா பிடித்தேன்.
பிஞ்சு விரலால்
எழுதிய முதல்
பேனா இன்றும்
பொக்கிஷமாய்.
இன்றும் ஒவ்வொரு முறை
திறக்கும் போதும்,
மை இல்லாமல் தவித்த
நான்காம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வில்
ஏற்பட்ட பயம்
லேசாய் இதழோரம்
சிரிப்பு மூட்டிச் செல்லும்.
புதுசாய் எத்தனை
பேனா வந்தாலும்
ஏப்ரல் ஒண்ணாந்
தேதி மை தெளிக்க
உபயோகிப்பதற்காகவே
முதல் பேனா
பாதுகாக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பரீட்சையில்
மை தீர்ந்து போனால்
ஊற்றிக் கொள்ள
மை குடித்து
குட்டி மை புட்டியாக
கூட வந்தது.
கட்டுக் கட்டாய்
காகிதம் தின்னக்
கொடுத்து
சொட்டுச் சொட்டாய்
மை வண்ணங்கள்
ஊற்றி எழுதிய
என் பேனா ஒரு நாளும்
என் எண்ணங்களை
ஊற்றி எழுதாததை
எண்ணி ஏளனமாய்
சிரிக்குமோ?
முதன் முதலாக
பேனா பிடித்தேன்.
பிஞ்சு விரலால்
எழுதிய முதல்
பேனா இன்றும்
பொக்கிஷமாய்.
இன்றும் ஒவ்வொரு முறை
திறக்கும் போதும்,
மை இல்லாமல் தவித்த
நான்காம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வில்
ஏற்பட்ட பயம்
லேசாய் இதழோரம்
சிரிப்பு மூட்டிச் செல்லும்.
புதுசாய் எத்தனை
பேனா வந்தாலும்
ஏப்ரல் ஒண்ணாந்
தேதி மை தெளிக்க
உபயோகிப்பதற்காகவே
முதல் பேனா
பாதுகாக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பரீட்சையில்
மை தீர்ந்து போனால்
ஊற்றிக் கொள்ள
மை குடித்து
குட்டி மை புட்டியாக
கூட வந்தது.
கட்டுக் கட்டாய்
காகிதம் தின்னக்
கொடுத்து
சொட்டுச் சொட்டாய்
மை வண்ணங்கள்
ஊற்றி எழுதிய
என் பேனா ஒரு நாளும்
என் எண்ணங்களை
ஊற்றி எழுதாததை
எண்ணி ஏளனமாய்
சிரிக்குமோ?
Labels: கவிதை, கிறுக்கல்கள், தமிழ், பேனா
1 Comments:
nice 1...
very nice...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home